உள்ளூர் செய்திகள்

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2023-03-18 15:17 IST   |   Update On 2023-03-18 15:17:00 IST
  • விஜயராஜ் என்பவருக்கு திருமணமாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
  • மனமுடைந்த விஜயராஜ் நேற்று முன்தினம் கம்பெணி குடோன் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கர்நாடகா மாநிலம் மதன்போர்கவுஸ் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (வயது 34) என்பவர் கடந்த 4 மாதங்களாக வேலைப பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணமாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த விஜயராஜ் நேற்று முன்தினம் கம்பெணி குடோன் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது உறவினர் சுந்தரன் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News