உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-05-29 15:02 IST   |   Update On 2023-05-29 15:02:00 IST
  • கடந்த 26-ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்,

பாகலூர் அருகே உள்ள மல்லசந்திரத்தைச் சேர்ந்தவர் நவீன்ரெட்டி (வயது 24). இவர் கனடா நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண் சமீபத்தில் நவீன்ரெட்டியுடன் உடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மன வருத்தத்தில் இருந்த நவீன்ரெட்டி கடந்த 21-ந் தேதி மல்லசந்திரத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இங்கு வந்த இடத்தில் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 26-ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீன்ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News