உள்ளூர் செய்திகள்

பலியான தண்டபாணி

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2023-09-03 09:35 GMT   |   Update On 2023-09-03 09:35 GMT
  • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
  • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி தென்பிடாகை மேலத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 24). கூலித்தொழிலாளி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த தண்டபாணி நேற்று முன்தினம் காலை வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக

ல் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News