உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை -தாய் கவலைக்கிடம்

Published On 2023-11-07 06:42 GMT   |   Update On 2023-11-07 06:42 GMT
  • குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார். தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பசுமை நகரை சேர்ந்தவர் சர்க்கரை மகள் வினோதேவி(33). இவருக்கும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த முரளிகுமார் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே வினோதேவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேனிக்கு வந்து தனது தாய் முருகலெட்சுமி யுடன் தனியாக கொடு விலார்பட்டியில் வசித்து வந்தார்.

இதனிடையே அவரது கணவர் முரளிகுமார் அவ்வப்போது தேனிக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார். இதனால் அவரது தாயார் முருகலட்சுமியும் இனிமேல் தனது மகள் கணவருடன் சேர்ந்த ஒற்றுமையாக வாழ்வார் என நினைத்து ள்ளார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சம்பவத்தன்று வினோதேவியின் அண்ணன் மதன்ராஜா தீபாவளிக்கு ஜவுளி எடுக்க தனது தங்கை குடும்பத்தை அழத்துச்செல்வதற்காக வந்துள்ளார். அப்போது ஒரு அறையில் வினோதேவி தூக்குமாட்டிய நிலையில் இறந்துகிடந்தார்.

அவரது தாய் முருக லட்சுமி அதிகளவு மாத்திரை களை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக தனது தாயை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது.

போலீசார் சம்பவ இட த்திற்கு வந்து வினோதேவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News