உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

Published On 2023-03-11 15:41 IST   |   Update On 2023-03-11 15:41:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
  • வித்யா நேற்று வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர், மார்ச்.11-

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள லேடர்தட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் ஆந்திரம் மாநிலம், குண்டூர் பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (வயது27). இவர்களுக்கு சுபாஷினி, சஞ்சனா ஆகிய 2 மகள்கள் உள்ளன.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட வித்யா நேற்று வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News