உள்ளூர் செய்திகள்
- ஜிட்டாண்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் இவர் மீது மோதியது.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள கருவட்டனூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது37). இவர் கூல்ரிங்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள ஜிட்டாண்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பழனி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.