உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு- வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2023-04-06 06:56 GMT   |   Update On 2023-04-06 06:56 GMT
  • அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
  • இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மீஞ்சூர்:

அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2வது அலகில் செயல்பட்ட கொதிகலனில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News