உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் ஆக்கி அணி வீரர்கள் தேர்வு முகாம்

Published On 2023-02-23 09:17 GMT   |   Update On 2023-02-23 09:17 GMT
  • ஆக்கி போட்டிகள் வருகிற மே மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
  • தமிழக அணி சார்பாக கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கான போட்டி தேர்வு தருமபுரியில் நடக்கிறது.

தருமபுரி, 

13-வது தேசிய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டிகள் வருகிற மே மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.

இதில் தமிழக அணி சார்பாக கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கான போட்டி தேர்வு மாவட்டங்களுக்கு இடையான போட்டியாக வருகிற மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் 5- தேதி வரை தேனியில் பெண்களுக்கும், மார்ச் 3-ம் தேதி முதல் 8-மே தேதி வரை கோவில்பட்டியில் ஆண்களுக்கும் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டம் சார்பாக இந்த இரு போட்டிகளிலும் கலந்து கொள்ள இருக்கும் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு முகாம் நாளை மறுநாள் சனிக்கிழமை கமலம் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் காலை 8 மணிக்கு பெண்களுக்கும், மதியம் 2 மணிக்கு ஆண்களுக்கும் நடைபெற உள்ளது.

1.1.2004 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வீரர்கள் வரும் பொழுது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 எடுத்து வர வேண்டும் என்று தருமபுரி ஆக்கி சங்கத் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News