கோத்தகிரியில் காட்டுபன்றி தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம்
- புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு பன்றி மணிமேகலையை முட்டி தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்தார்.
- வனத்து–றையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரவேணு:
கோத்தகிரி கிருஷ்ணாபுதூரை சே–ர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி மணிமேகலை(வயது34). தோட்ட தொழிலாளி.
இவர் தினமும் தோட்டத்திற்கு தேயிலை பறிக்க செல்வது வழக்கம். நேற்று காலையும் வழக்கம்போல் தோட்டத்திற்கு தேயிலை பறிக்க சென்றார்.
தோட்டத்தில் தேயிலை பறித்து அதனை மூட்டையாக கட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு பன்றி மணிமேகலையை முட்டி தாக்கியது. இதில் அவர் காயம் அடைந்தார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மணிமேகலையை மீட்டு கோத்தகிரி அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து வனத்து–றையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொழிலாளிகளை காட்டுப்பன்றி தாக்குவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.