உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்-பொதுமக்கள் மனு

Published On 2023-06-13 09:29 GMT   |   Update On 2023-06-13 09:29 GMT
  • சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆர்.பூசாரிப்பட்டி பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர். பூசாரிப்பட்டி-தானம்பட்டி ரோட்டில் சுமார், 350 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த காலங்களில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருவர் இறந்துள்ளனர்.

மேலும் டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் பள்ளி, மசூதி, தேவாலயம் உள்ளிட்டவைகளும் உள்ளன. இந்த டாஸ்மாக் கடை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்னைகள் உள்ளிட்டவைகளாலும் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இது குறித்து விசாரித்து டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News