உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த காளியம்மாள்.

சிவகிரி அருகே இன்று காலை விபத்து- டேங்கர் லாரி மோதி ஆசிரியை பலி

Published On 2022-07-19 09:16 GMT   |   Update On 2022-07-19 09:16 GMT
  • ரோட்டின் மறு புறத்திற்கு குப்பையை கொட்ட சென்ற காளியம்மாள் மீது டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.
  • விபத்து பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து சென்று காளியம்மாளை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

சிவகிரி:

சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்குமரன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 80).

ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் குப்பையை கொட்ட ரோட்டின் மறு புறத்திற்கு சென்றார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக காளியம்மாள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காளியம்மாளை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரியை திண்டுக்கல் மாவட்டம் டி.பாறைப்பாட்டி காலனி தெருவைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் மதுரை கப்பலூரில் இருந்து டேங்கர் லாரியில் டீசல் ஏற்றி சென்று செங்கோட்டை யில் உள்ள பங்கில் இறக்கி விட்டு திரும்பி கொண்டி ருந்த போதுதான் விபத்து நடந்துள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News