உள்ளூர் செய்திகள்

கொக்கு மருந்து சாப்பிட்ட டேங்க் ஆபரேட்டர் சாவு

Published On 2023-07-20 15:30 IST   |   Update On 2023-07-20 15:30:00 IST
  • கொக்கு மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார்.
  • அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள அங்கம்பட்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது58). இவர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோவிந்தம்மாள்.

இந்த நிலையில் நேற்று சந்திரன் கொக்கு மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News