உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு

Published On 2023-07-22 05:57 GMT   |   Update On 2023-07-22 07:18 GMT
  • முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
  • மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது

தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 1200 ரூபாயாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News