உள்ளூர் செய்திகள்
மதுரவாயலில் சாலையோரம் கிடந்த வாலிபர் பிணம்
- சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- இறந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை மதுரவாயல் கங்கையம்மன் கோவில் தெருவில் இன்று காலை சாலையோரம் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற போலீசார் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.