உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பிணியாக்கி கருவை கலைக்க மிரட்டிய வாலிபர் கைது

Published On 2022-12-20 10:43 IST   |   Update On 2022-12-20 10:43:00 IST
  • கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
  • அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி(22). நர்சிங் படித்து முடித்துள்ள இவர் கம்பத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இவரும் போடி அருகில் உள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பாண்டியன்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் 5 மாத கர்ப்பிணியானார். இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார்.

ஆனால் பாண்டியன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் பாண்டியனை மறந்துவிடும்படியும், கருவை கலைத்துவிடும்படியும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.

அவரது தந்தை ஈஸ்வரன், தாய் ஈஸ்வரி, சித்தி வசந்தி, பெரியம்மா செல்வி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News