உள்ளூர் செய்திகள்

திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர்

Published On 2022-06-21 11:55 IST   |   Update On 2022-06-21 11:55:00 IST
இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.

இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

நான் கோவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். நான் கல்லூரியில் படித்த போது அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவர் வந்து இருந்தார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம்.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தோம். எனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவைக்கு வரும் அரவிந்த் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை என்னுடன் ஜாலியாக இருந்தார்.

ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நான் அரவிந்தை நேரில் சந்தித்து என்னை திருமணம் செய்யும்படி கூறினேன்.

ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் போலீசார் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News