உள்ளூர் செய்திகள்

செக்ஸ் மசாஜ் செய்ய மறுத்த இளம்பெண்ணை கட்டிப்போட்டு தாக்குதல்-நகை பறிப்பு

Published On 2022-10-12 10:18 GMT   |   Update On 2022-10-12 10:18 GMT
  • தனி அறையில் தாக்குதல் நடந்ததால் வெளியில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவில்லை.
  • வாலிபர் வெளியே சென்ற பின்னரே இளம்பெண்ணை தாக்கி நகை, கம்மலை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.

போரூர்:

விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 5-ந்தேதி வாலிபர் ஒருவர் மசாஜ் செய்ய வந்தார். அவரிடம் ரூ.1000 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

பின்னர் அங்கிருந்த 23 வயது இளம்பெண் ஒருவர் அந்த வாலிபருக்கு மசாஜ் செய்து விட்டார். இளம்பெண்ணின் அழகில் மயங்கிய வாலிபர் சிறிது நேரம் கழித்து செக்ஸ் மசாஜ் செய்யும்படி அவரை வற்புறுத்தினார்.

இதற்கு இளம்பெண் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி அவரது கை, கால்களை கட்டி போட்டார். மேலும் அவர் அணிந்திருந்த செயின் மற்றும் கம்மலை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

தனி அறையில் இது நடந்ததால் வெளியில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவில்லை. வாலிபர் வெளியே சென்ற பின்னரே இளம்பெண்ணை தாக்கி நகை, கம்மலை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மசாஜ் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது செக்ஸ் மசாஜ் செய்யக் கூறி இளம்பெண்ணை தாக்கி நகையுடன் தப்பியது அனகாபுத்தூரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜித் என்கிற சுரேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் மசாஜ் விளம்பரத்தை பார்த்து மது போதையில் வந்ததாகவும், செக்ஸ் மசாஜ்க்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் பெண் ஊழியரை தாக்கி கம்மல், செயினை பறித்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News