உள்ளூர் செய்திகள்
ஹீட்டரை பயன்படுத்தி வெந்நீர் வைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி
- மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரில் வசித்து வந்தவர் புஷ்பா (வயது54). இவர் நேற்று இரவு ஹீட்டர் பயன்படுத்தி வாளியில் வெந்நீர் வைத்தார். சிறிது நேரம் கழித்து வெந்நீர் சூடாகிவிட்டதா என்று அவர் தொட்டு பார்த்ததாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.