உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே 14-வது நாளாக தொடரும் மக்களின் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-01-18 11:24 IST   |   Update On 2023-01-18 11:24:00 IST
  • சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க 3,500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று 14-வது நாளாக உத்தனப்பள்ளியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News