உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் நூல் மில்லில் தீ விபத்து

Published On 2023-11-06 10:21 IST   |   Update On 2023-11-06 10:21:00 IST
  • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் . இவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் காங்கயத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 2 தீயணைப்பு நிலைய வீரர்களும் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் கட்டிடங்கள் , எந்திரங்கள், மில்லில் இருந்த 45 டன் பஞ்சு , 35 டன் வேஸ்ட் துணிகள் எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News