உள்ளூர் செய்திகள்

வண்டலூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது

Published On 2022-12-30 16:15 IST   |   Update On 2022-12-30 16:15:00 IST
  • வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மதுவிலக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மது விற்று கொண்டிருந்த சிவகங்கை பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News