உள்ளூர் செய்திகள்
வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- சிறுவன் உள்பட 2 பேர் கைது
- ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
- வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
போரூர்:
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
2 வாலிபர்கள் கடப்பாரையை கொண்டு ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர் அப்போது எச்சரிக்கை மணி அடித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத் (22) மற்றும் அவனது கூட்டாளியான 18வயதுக்கு உட்பட்ட சிறுவன் இருவரும் சேர்ந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்று தப்பியது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர் அவர்களிடம் இருந்து ஒரு மொப்பட் பறிமுதல் செய்யப்பட்டது.