உள்ளூர் செய்திகள்

வாணியாறு அணையில் நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2024-03-30 07:15 GMT   |   Update On 2024-03-30 07:16 GMT
  • அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தூர்:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு கல்லூரி பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது . இங்கு 100 மாணவர்கள் தங்கிபடித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக நாகராஜ், சமையலராக மெணசியை சேர்ந்த சிலம்பரசன், வாட்சமேனாக தங்கவேல் ஆகிய 3 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முதல் 3 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

சுமார் 20 மாணவர்கள் மட்டுமே விடுதியில் இருந்தனர்.

இதில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இளங்குன்னி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரேம்குமார், (19) முதலாம் ஆண்டு இயற்பியல் படிக்கும் பூபதி, (17) ஆகிய 2 பேரும் நேற்று மதியம் சாப்பிட்டு விட்டு, வாணியாறு அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

அப்போது அணையில் இறங்கிய பிரேம்குமார் செல்போன் மூலம் போட்டோ எடுக்க கூறியுள்ளார். அப்போது அணையில் சேற்றில் சிக்கி பிரேம்குமார் உயிருக்கு போராடியுள்ளார். அவரை பூபதி காப்பாற்ற முயற்சி செய்தும் முடியாமல் போகவே, கூச்சலிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின் பேரில் வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர், போலீசாரும் அணையில் இருந்து சடலமாக பிரேம்கு மாரை மீட்டனர். புகாரின் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News