உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர்களை தாக்கிய வாலிபர்கள்

Published On 2022-09-16 17:48 IST   |   Update On 2022-09-16 17:48:00 IST
  • உத்திரமேரூரில் இருந்து அகரம்தூளி கிராமம் வரை செல்லும் அரசு பஸ் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது.
  • வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து பஸ் படிக்கட்டில் தொங்கியவர்களை தாக்கியுள்ளனர்.

உத்திரமேரூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து அகரம்தூளி கிராமம் வரை செல்லும் அரசு பஸ் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தினந்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். தற்போது இந்த கிராமங்களுக்கிடையே இந்த அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் உத்திரமேரூரில் இருந்து புறப்பட்ட பஸ் அகரம்தூளி நோக்கி சென்று கொண்டிருந்தது. வேடபாளையம் கிராமம் அருகே சென்றபோது வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து பஸ் படிக்கட்டில் தொங்கியவர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.

தகவலறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனால் அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News