உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் பகுதியில் கனமழையால் ரெயில்கள் தாமதம்- பயணிகள் அவதி
- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் சென்னை-மும்பை செல்லும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.
மேலும் சென்னை அரக்கோணம் புறநகர் மின்சார ரெயில்களும் காலதாமதமாக வந்து சேர்ந்தது.
இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர் எனினும் தொடர் மழையால் வாட்டி வதைத்த வெயில்வெப்பம் தணிந்து குளிர்ச்சியானது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரக்கோணத்தில் 54 மி.மி. மழை பெய்துள்ளது.