உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே அடுத்தடுத்து விபத்து- ரெயில் மோதி கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி

Published On 2022-10-30 14:05 IST   |   Update On 2022-10-30 14:05:00 IST
  • தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது.
  • தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாம்பரம்:

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சோனியா (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார்.

நேற்று இவர் தோழிகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு செல்வதற்காக தோழிகளுடன் வண்டலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல் தாம்பரம்- பெருங்களத்தூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்கவர் மீது அவ்வழியாக வந்த விரைவு ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News