உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை- லாரி டிரைவர் கைது

Published On 2023-07-24 14:19 IST   |   Update On 2023-07-24 14:19:00 IST
  • போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
  • ரமேஷ் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

திருப்பூர்:

திருப்பூர் சேர்ந்த 16 வயது இளம்பெண் திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:- நான் எனது தாயுடன் திருப்பூரில் வசித்து வருகிறேன். பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்தநிலையில் சென்னையை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் (வயது 42) என்பவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது வந்த ரமேஷ் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அவரிடமிருந்து தப்பித்து ஓடிவந்தேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார்.

இதையடுத்து போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்த போது இளம்பெண்ணின் தாயுடன் ரமேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

இதனால் ரமேஷ் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். நேற்று ரமேஷ் வந்தபோது கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நிலையில் அவரது 16 வயதான மகள் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ரமேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைதான ரமேசை போலீசார் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News