உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் பெண்ணிடம் நகை கொள்ளை
- ரெயில் நிலையத்தில இறங்கும் போது தான் புவனேஸ்வரிக்கு நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
- திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பூங்கா நகர், சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி புவனேஸ்வரி (34). இவர் கடம்பத்தூரில் உள்ள வங்கியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கடம்பத்தூர் நோக்கி திருத்தணி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பயணம் செய்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் புவனேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில இறங்கும் போது தான் புவனேஸ்வரிக்கு நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.