உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே பண்ணை தோட்டத்தில் ரூ.1¼ லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2022-10-22 17:12 IST   |   Update On 2022-10-22 17:12:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலாளி அர்ஜுன் தாபா மாயமாகி போனார்.
  • மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.

மணவாளநகர்:

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் தேவநாதன். இவருக்கு திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் இலுப்பூர் சாலையில் பண்ணை தோட்டம் ஒன்று உள்ளது. இந்த பண்ணை தோட்டத்தில் நேபாளத்தை சேர்ந்த அர்ஜுன் தாபா என்ற காவலாளி நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலாளி அர்ஜுன் தாபா மாயமாகி போனார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ணை தோட்டத்தின் உரிமையாளர் தேவநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மின்சார மற்றும் பிளம்பிங் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மின்சார மற்றும் பிளமிங் பொருட்களை திருடி சென்ற காவலாளி அர்ஜுன் தாபாவை தெடி வருகின்றனர்.

Similar News