உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2022-10-11 17:49 IST   |   Update On 2022-10-11 17:49:00 IST
  • திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் தேவி.
  • தேவி வேலைக்கு சென்ற பிறகு அவரது தாயார் சாவித்திரி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் தேவி (வயது 55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்ததால் தனது தாயாருடன் வசித்து வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் தேவி வேலைக்கு சென்ற பிறகு அவரது தாயார் சாவித்திரி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News