உள்ளூர் செய்திகள்

படகு பழுதானதால் கடலில் தத்தளித்தனர் : வேதாரண்யம் வந்த இலங்கை வாலிபர்கள்

Published On 2023-09-15 16:02 IST   |   Update On 2023-09-15 16:02:00 IST
  • கடலில் 13 மைல்கல் தூரம் சென்ற போது படகு திடீரென பழுதானது.
  • மீன்பிடிக்க கடலுக்கு வந்தார்களா, அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

இலங்கை தலைமன்னாரை சேர்ந்தவர்கள் நிக்சன் டீலக்ஸ் (வயது 38). சுபத்திரன் (36). இவர்கள் 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு படகில் இலங்கையில் இருந்து கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கடலில் 13 மைல்கல் தூரம் சென்ற போது படகு திடீரென பழுதானது. இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.

பின்னர் காற்றின் வேகத்தினால் அவர்களது படகு இன்று காலை வேதாரண்யம் கோடியக்கரை அருகே சிறுதலைக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலங்கை வாலிபர்கள் நிக்சன் டீலக்ஸ், சுபத்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு வந்தார்களா, அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News