உள்ளூர் செய்திகள்

சோம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2023-07-05 11:20 GMT   |   Update On 2023-07-05 11:20 GMT
  • இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.
  • முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல் ஆட்டோமெட்ரி சர்வீஸ் மற்றும் ஜான் டி நுல் ட்ரேடஜிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்தியசிறு மற்றும் ஒரு தொழிலாளர்களுக்கான நிறுவனம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.

இதில் துணை தலைவர் விஜயலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் வெற்றி (எ) ராஜேஷ் தொண்டு நிறுவனம் பத்மநாபன் ரகுநாத், வரதன், சசிபாபு, சோம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளர் தமிழரசன், தனியார் கண் மருத்துவமனை டாக்டர் ராஷிமா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News