உள்ளூர் செய்திகள்
திரிசூலத்தில் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய 13 வீடுகளுக்கு சீல்
- சிவசக்தி நகரில் திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது.
- நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 13 வீடுகளை அகற்ற அற நிலையத்துறை அதிகாரிகள் வந்தனர்.
தாம்பரம்:
திரிசூலம், சிவசக்தி நகரில் திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஏற்கவே முதல் கட்டமாக சில ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் 2-வது கட்டமாக கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 13 வீடுகளை அகற்ற அற நிலையத்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் வீடுகளுக்கு சீல் வைத்தனர். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.