உள்ளூர் செய்திகள்

சேலம் கன்னங்குறிச்சியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2023-08-21 12:10 IST   |   Update On 2023-08-21 12:10:00 IST
  • ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி ராணி அண்ணா நகர் சந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்சுரேஷ் (21), இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

இந்த நிலையில் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த்சுரேஷ் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் சமீப காலமாக ஆனந்த்சுரேசிடம் பேசாமால் ஒதுங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் சுரேஷ் மன வேதனையில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்ற ஆனந்த்சுரேஷ் இன்று காலை வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால்அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.

இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News