உள்ளூர் செய்திகள்

ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருள் திருட்டு: லாரி டிரைவர்-கூட்டாளி கைது

Published On 2022-11-07 16:20 IST   |   Update On 2022-11-07 16:20:00 IST
  • கோயம்புத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு லாரியில் இரும்பு தளவாட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
  • லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திருடப்பட்டது.

திருத்தணி:

ஆர்.கே. பேட்டை அடுத்த மோகினிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். லாரி டிரைவர். இவர் கோயம்புத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு தளவாட பொருட்களை ஏற்றி சென்றார்.

அப்போது நண்பரான பந்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருடன் சேர்ந்து லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி விற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News