உள்ளூர் செய்திகள்

வேலூரில் டாக்டர் வீட்டில் ரூ.10 லட்சம், நகை கொள்ளை

Published On 2022-07-24 13:15 IST   |   Update On 2022-07-24 13:15:00 IST
  • பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளையர்கள் கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது.
  • பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளையர்கள் கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது.

வேலூர்:

வேலூர், பூந்தோட்டம், சகுந்தலா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுப்ரியா. இருவரும் அரசு டாக்டர்களாக உள்ளனர். மேலும் வேலப்பாடியில் தனியாக கிளினிக் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு கொச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் 2 பேர் இன்று அதிகாலை 2 மணி அளவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 10 பவுன் நகைகள் மற்றும் அடுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டனர்.

மேலும் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்த ரூ.5 லட்சம் கொள்ளையர்கள் கையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. அதனை கொள்ளையர்கள் கவனிக்காததால் பணம் தப்பியது.

இன்று காலை வீட்டு வேலை செய்யும் பெண் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டாக்டர் மணிகண்டனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மணிகண்டன் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வேலூர் டவுன் டி.எஸ்பி திருநாவுக்கரசு இன்ஸ்பெக்டர்கள் சியாமளா மற்றும் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தபடி வேலப்பாடி பஸ் நிலையம் வரைசென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

எதிர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி கேமராவில் பதிவானவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News