உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கொள்ளையன் கைது

Published On 2023-04-20 07:03 GMT   |   Update On 2023-04-20 07:03 GMT
  • மேஷாக் என்பவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.
  • கொள்ளையில் ஈடுபட்டது செங்குன்றம் அடுத்த பம்மது குளம், சன்சிட்டி பகுதியை சேர்ந்த சிபி என்பது தெரியவந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர், மாருதி நியூடவுன், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மேஷாக். இவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பரண்டு விவேகானந்தா சுக்லா, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் கொள்ளையில் ஈடுபட்டது செங்குன்றம் அடுத்த பம்மது குளம், சன்சிட்டி பகுதியை சேர்ந்த சிபி (31) என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News