உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

Published On 2023-01-29 14:38 IST   |   Update On 2023-01-29 14:38:00 IST
  • கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து திட்ட வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • பயிற்சியுடன் சார்நிலை அலுவலர்களுக்கு புத்துணர்ச்சியுடன் செயல்படுவது மற்றும் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி:

செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கான வருடாந்திர புத்தாக்கப் பயிற்சி செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் செயல்பட்டு வரும் செங்கல்பட்டு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. பயிற்சியை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன், கூடுதல் பதிவாளர் மற்றும் செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளர் ம.தமிழ்ச்செல்வி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இப்பயிற்சியில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து திட்ட வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சியுடன் சார்நிலை அலுவலர்களுக்கு புத்துணர்ச்சியுடன் செயல்படுவது மற்றும் யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு சரக துணைப்பதிவாளர் ம.சுடர்விழி,மதுராந்தகம் சரக துணைப்பதிவாளர் பா.ஜஸ்வர்யா,செங்கல்பட்டு மாவட்ட துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) இரா.சற்குணன், செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் பாலாஜி மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Similar News