உள்ளூர் செய்திகள்
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை
- மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
- மலை கிராமங்களில் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 281.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. கொடைக்கானலில் கன மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மேலும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மலை கிராமங்களில் பொதுமக்கள் இருளில் தவித்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.