உள்ளூர் செய்திகள்

குடிநீர் வழங்க கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்

Published On 2024-01-29 08:38 GMT   |   Update On 2024-01-29 08:38 GMT
  • கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது.
  • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் காந்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று காலையும் குடிநீர் சரிவர வரவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News