உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் தொட்டி அமைப்பதில் பிரச்சினை- அரசு பள்ளி ஆசிரியர் தீக்குளித்து பலி

Published On 2023-07-14 05:26 GMT   |   Update On 2023-07-14 05:26 GMT
  • அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது.
  • செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 38). இவர் நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி கீதா பிரியா.

அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

இதில் மனம் உடைந்த ஆசிரியர் அழகர்சாமி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார் 80 சதவீத தீக்காயத்துடன் இருந்தவரை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த 10-ந் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றன.

Tags:    

Similar News