உள்ளூர் செய்திகள்

விடுதியில் தங்கி இருந்த கல்லூரி மாணவரின் செல்போன்-லேப்டாப்பை திருடிய வாலிபர் கைது

Published On 2023-08-13 12:47 IST   |   Update On 2023-08-13 12:47:00 IST
  • அவரது அறையில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது.
  • பொன்னேரி பகுதியை சேர்ந்த சுகன் என்பவரை கைது செய்தனர்.

பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நிதிஷ்குமார் என்பவர் தைலாவரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் அவரது அறையில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து திருட்டில் ஈடுபட்ட பொன்னேரி பகுதியை சேர்ந்த சுகன்(27) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News