உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயம்

Published On 2023-03-25 06:37 GMT   |   Update On 2023-03-25 06:37 GMT
  • கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
  • பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) முடி திருத்தும் தொழிலாளி. இவர் திருவொற்றியூரில் முடி திருத்தும் கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News