உள்ளூர் செய்திகள்

செல்போனில் 100 பெண்களின் குளியல் காட்சிகள்- ஆபாச இணைய தளத்துக்கு விற்க எடுக்கப்பட்டதா?

Published On 2022-09-21 11:55 GMT   |   Update On 2022-09-21 11:55 GMT
  • பெண்களின் குளியல் காட்சிகளை ஆபாச இணைய தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுக்கப்பட்டது.
  • யார்? யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

வேளச்சேரி:

வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

இங்குள்ள கழிவறை அருகே நின்றபடி பெண்கள் குளிப்பதை 2 வாலிபர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விசாரித்த போது 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர்.

பொதுமக்கள் மடக்கி பிடித்து விசாரித்த போது வாலிபர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த செல்போனில் வீடியோக்களை அழித்தான். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர்கள் 2 பேருக்கும் தர்ம அடி கொடுத்து வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் வேளச்சேரி பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீராம் (வயது 29). அவரது நண்பரான வெங்கடேசன் (32) என்பது தெரிந்தது.

அவர்களது செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் வீடியோக்கள், புகைப்படம் எதுவும் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து 'ரெக்கவரி சாப்ட்வேர்' மூலம் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்கள், படங்களை திரும்ப எடுத்தனர்.

இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் குளியல் வீடியோக்கள், ஆபாச படங்கள் இருந்தன. கைதான இருவரும் சாலையோரம் குளியல் அறை உள்ள வீடுகளை நோட்டமிட்டு அதில் தங்களது செல்போன்களை மறைத்து வைத்து பெண்களின் குளியல் காட்சிகளை பதிவு செய்து வந்து உள்ளனர். பலருக்கு அனுப்பினர்.

அந்த ஆபாச வீடியோக்களை அவர்கள் பார்த்து ரசித்து வந்த உள்ளனர்.

மேலும் பலருக்கு பெண்கள் குளியல் காட்சிகளை அனுப்பி உள்ளதும் தெரியவந்து உள்ளது.

பெண்களின் குளியல் காட்சிகளை ஆபாச இணைய தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுக்கப்பட்டது.

யார்? யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்களை அவர்கள் மிரட்டி பணம் பறித்தனரா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கைதான இருவரும் வேளச்சேரி பகுதியில் காலை நேரங்களில் பல வீடுகளை நோட்டமிட்டு தங்களது செல்போனை கழிவறை பின் ஜன்னல்களில் மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்து உள்ளனர்.

ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து செல்போன் வைத்து விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து எடுத்து சென்று உள்ளனர்.

இதனை யாரும் கவனிக்காததால் அவர்களது ஆபாச வீடியோ பதிவு நீடித்தது உள்ளது.

அவர்கள் கடந்த 6 மாதத்துக்கு மேலாக இவ்வாறு குளியல் காட்சிகளை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் தாங்கள் பார்த்து ரசிப்பதற்கும், நண்பர்களுக்கு அனுப்பவும் பதிவு செய்து இருக்கிறார்கள். இணையதளத்தில் பெண்கள் குறியல் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

பெண்கள் சிலரை ஆபாச வீடியோ பதிவை காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.

ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை. பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News