உள்ளூர் செய்திகள்
காட்டுப்பள்ளியில் கடலில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
- காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் கடற்கரை அருகில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
- காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் கடற்கரை அருகில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பிணமாக மீட்கப்பட்டவரின் உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.