உள்ளூர் செய்திகள்

பட்டாக்கத்தியுடன் 'ரீல்ஸ்' செய்த 4 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை- 'லைக்'கிற்கு ஆசைப்பட்டு சிக்கினர்

Published On 2023-08-18 08:08 GMT   |   Update On 2023-08-18 08:08 GMT
  • காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர்.
  • வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே காயலார்மேடு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் பெரிய பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் "தப்பு நடக்கக்கூடாது என்று அடிக்கவில்லை, தப்பு நடக்கனும், அதை நாங்க மட்டும் தான் செய்யனும்'' என்ற பஞ்ச் வசனத்துடன் பட்டாக்கத்தியை எடுத்து காண்பிக்கிறார்கள். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் சமூகவலைதளத்தில் லைக்கிற்கு ஆசைப்பட்டு பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து சிக்கி உள்ளனர்.

அவர்கள் மீது ஏற்கனவே எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். இந்த வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News