உள்ளூர் செய்திகள்

மிக்சியை பழுதுபார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2023-07-16 14:00 IST   |   Update On 2023-07-16 14:00:00 IST
  • வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார்.
  • பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்(வயது23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு நர்மதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தற்போது நர்மதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் இருந்த மிக்சியை குப்பன் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி குப்பன் பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News