உள்ளூர் செய்திகள்

ஸ்தம்பித்தது பெருங்களத்தூர்- போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-03-12 14:35 GMT   |   Update On 2023-03-12 14:35 GMT
  • பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
  • போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிய வாகன ஓட்டிகள்.

சென்னை, தாம்பரம் இரும்புலியூரில் தனியார் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News