உள்ளூர் செய்திகள்

தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-07-07 14:13 IST   |   Update On 2023-07-07 14:13:00 IST
  • மனவேதனை அடைந்த ஜெகதீஷ், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள்.இவரது மகன் ஜெகதீஷ் (வயது16). தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில், மாணவன் ஜெகதீஷ் ஒழுங்காக படிக்காமல் எப்போதும் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.

இதில் மனவேதனை அடைந்த ஜெகதீஷ், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News