உள்ளூர் செய்திகள்
விபத்தில் மூளைச்சாவு- தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்.
ராயபுரம்:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(59). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 9-ந்தேதி இரவு சேகர் உணவு வாங்கு வதற்காக பெருவாயல் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயம்அடைந்த சேகர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சேகரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் உயிருக்கு போராடி காத்திருக்கும் மற்ற நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.